NATIONAL

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 6 மாதக் காலப் பயண அனுமதி அட்டை அறிமுகம்

13 மார்ச் 2025, 7:13 AM
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 6 மாதக் காலப் பயண அனுமதி அட்டை அறிமுகம்

கோலாலம்பூர், மார்ச் 13 - வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான புதிய பல்நுழைவு பயண அனுமதி அட்டையின் வாயிலாக அவர்கள் இங்கு 6 மாதக் காலத்திற்கு தங்க முடியும்.

அவர்களின் தேவையைப் பொறுத்து மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பற்கும் வாய்ப்பு இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழையும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அந்த அட்டை வழங்கப்படும்.

முதலீட்டாளர் அட்டைத் திட்டம் என்றும் அழைக்கப்படும் அப்புதியத் திட்டமானது, மலேசியாவில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்நாட்டுக்குள் நுழைவதை எளிதாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கென சிறப்புப் பயண அட்டை எதுவும் இல்லை; மாறாக அவர்களின் சொந்த நாடுகளைப் பொறுத்து 14 முதல் 90 நாட்களுக்கு பயன்படுத்தக் கூடிய சமூக பயண அட்டையே வழங்கப்படுகிறது.

உள்துறை அமைச்சின் `Xpats Gateway` இணைய அகப்பக்கம் வாயிலாக இத்திட்டம் அமுல்படுத்தப்படும். இது குறித்த மேல் விவரங்களும் அப்பக்கத்தில் இடம் பெற்றிருப்பதாக சைஃபுடின் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.