NATIONAL

கடலோர மண் அரிப்பு பிரச்சனையைக் களைய நடவடிக்கை குழு உருவாக்கம்

12 மார்ச் 2025, 8:29 AM
கடலோர மண் அரிப்பு பிரச்சனையைக் களைய நடவடிக்கை குழு உருவாக்கம்

கோலாலம்பூர், மார்ச் 12 - கடலோரத்தில் ஏற்படும் மண் அரிப்பு பிரச்சனையைக் கையாள்வதற்கான செயல்முறைகளை விரைவுப்படுத்த மத்திய அரசாங்கம், திரங்கானு மாநில அரசாங்கத்துடன் இணைந்து ஒரு செயற்குழுமை அமைக்கவுள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசாங்க நிறுவனங்களை உள்ளடக்கிய அக்குழுவிற்கு, திரங்கானு மாநில மந்திரி புசாருடம் இணைந்து தாம் தலைமையேற்கவுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் கூறியுள்ளார்.

கடலோரத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திட்டங்களும், ஆய்வுகளும், சீராக நடைபெறுவதை உறுதி செய்ய சமூகத்துடனான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

"கடலோரப் பகுதிகளில் பருவமழை பெய்யும்போது, கடலோர பகுதியில் அரிப்பு ஏற்படும். கடலோர அரிப்பு ஏற்படும்போது, நிலம் காணாமல் போவது ஒரு சவாலாக இருக்கின்றது.

எனவே, இந்த திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசாங்கம் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டியிருந்தது. அதை அப்புறப்படுத்த, ஒரு செயல்முறை உள்ளது. அந்த செயல்முறையை விரைவாக மேற்கொள்ள முடியாவிட்டால், தற்போது செயல்படுத்தி வரும் திட்டத்தின் கட்டுமானத்தைப் பாதிக்கும்.

கடலோரத்தில் ஏற்படும் மண் அரிப்பு பிரச்சனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் செனட்டர் சே அலியாஸ் ஹமிட் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு, டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் அவ்வாறு பதிலளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.