NATIONAL

பேங்க் நெகாரா மலேசியா அதிகாரியாக ஆள்மாராட்டம் 100,000 மோசடி

12 மார்ச் 2025, 7:18 AM
பேங்க் நெகாரா மலேசியா அதிகாரியாக ஆள்மாராட்டம் 100,000 மோசடி

குவாந்தான், மார்ச் 12 - மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா (BNM) அதிகாரியாகவும், நீதிமன்ற பிரதிநிதியாகவும் ஆள்மாராட்டம் செய்த மோசடிக் கும்பலால், ஓய்வுபெற்ற பெண் ஒருவர் 100,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

பணமோசடி குற்றாச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 60 வயதான அந்தப் பெண்ணுக்கு மார்ச் 5ஆம் திகதி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அந்த பெண் தன் சேமிப்பை அறிவிக்க, ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்த கட்டளையிடப்பட்டதாகப் பகாங் காவல்துறை தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.

பின், பயத்தின் காரணமாக மார்ச் 7 முதல் மார்ச் 9 வரை நான்கு முறை மொத்தம் 100,000 ரிங்கிட்டை இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அப்பெண் மாற்றியதாக யாஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

ஆகவே, சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால், உடனே அதிகாரிகளிடம் சரிபார்க்கவும். இணைய மோசடிகள் பெருகிவிட்டன, மேலும் குற்றவாளிகள் புதிய மற்றும் நவீன முறைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.

எனவே, அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.