NATIONAL

பாடகிக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

7 மார்ச் 2025, 8:32 AM
பாடகிக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

மலாக்கா, மார்ச் 7 — கடந்த மாதம் பகுதி நேர பாடகிக்கு மரணத்தை  ஏற்படுத்தியதாக வேலையில்லாத நபர் ஒருவர் மீது இன்று இங்குள்ள  ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நூர் அஃபிகா ராடியா ஜைனுரின் முன்னிலையில் தனக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக ​​54 வயதான ஹாங் யூ பெங் என்ற அந்த ஆடவர்   தலையசைத்தார். கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால்  குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கும் மாலை 3.30 மணிக்கும் இடையே மலாக்கா தெங்காவில் உள்ள தாமான் ஸ்ரீ மங்கா செக்சியன் 1, ஜாலான் ஸ்ரீ மங்காவில் உள்ள ஒரு வீட்டில் 52 வயதான லிங் லு செங் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக ஹாங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 12 பிரம்படிகள் விதிக்க வகை செய்யும்  தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரசு தரப்பில்  துணை அரசு வழக்கறிஞர் ஹனிஸ் அலியா அகமது கமருல் நஜுப்  வழக்கை நடத்தும் வேளையில்

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் டிஎன்ஏ மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை சமர்ப்பிக்க நீதிமன்றம் ஏப்ரல் 21 ஆம் தேதியை நிர்ணயித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.