NATIONAL

தமிழ்ப்பள்ளிகள் நலனில் தீர்வை மட்டும் ஆலோசிப்போம் – கோபிந்த் சிங்

27 பிப்ரவரி 2025, 4:46 AM
தமிழ்ப்பள்ளிகள் நலனில் தீர்வை மட்டும் ஆலோசிப்போம் – கோபிந்த் சிங்

கோலாலம்பூர், பிப் 27 – தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நீண்டநாள் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த விவகாரத்தில் தாம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்

இந்த விவகாரத்திற்கு தீர்வு காண குறிப்பிட்டத் தரப்புகளோடு பேச்சு வார்த்தை நடத்தியதாக கோபிந்த் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

பினாங்கு, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி , பகாங், ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி மற்றும் கெடா கத்தும்பா தோட்ட தமிழ்ப்பள்ளி ஆகியவை நீண்ட காலமாகப் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளன.

கல்வி அமைச்சரின் ஒத்துழைப்போடும் அரச சார்பற்ற இயங்களின் முயற்சியோடும் இப்பள்ளிகளின் விவகாரத்திற்கு நல்ல தீர்வு எட்டும் என்றும் கோபிந்த் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த மூன்று பள்ளிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்குறிய வழி ஏற்பட்டதால் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர், கோபிந்த் சிங்கிற்கு தனது பாராட்டை தெரிவித்துக்கொண்டார்

இந்நிலையில், இணைய பாதுகாப்பு தொடர்பாகக், குறிப்பாக சமூக வலைத் தலங்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ்ப்பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் நடத்த மித்ரா இலக்கவியல் அமைச்சுடன் கைகோர்க்கத் திட்டமிட்டுள்ளதாகப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையும் கோபிந்த் சிங் வரவேற்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.