NATIONAL

தந்தையை கத்தியால் குத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு மூன்று நாள் தடுப்புக் காவல்

27 பிப்ரவரி 2025, 4:41 AM
தந்தையை கத்தியால் குத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு மூன்று நாள் தடுப்புக் காவல்

கங்கார், பிப் 27- இங்குள்ள கோல பெர்லிஸ்,  கம்போங் பாடாங் பெசார் செலாத்தானில் கடந்த திங்கட்கிழமை   தனது 73 வயது தந்தையை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான  மாற்றுத் திறனாளி  அட்டையை வைத்திருக்கும் ஆடவர் ஒருவர் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக 45 வயதுடைய அந்த  நபரை காவலில் வைக்க கங்கார்  நீதிமன்ற மாஜிஸ்திரேட் நோர்ஷஹிடா  அப்துல் ரஹீம்

அனுமதி அளித்ததாக கங்கார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி யுஷாரிபுடின் முகமது யூசோப் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 326 வது பிரிவின் சந்தேகப் பேர்வழியைத் பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு  அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று அறிக்கையில் ஒன்றில் கூறினார்.

தந்தையை வெட்டப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தி சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த கிராமத்தில் பலவீனமான நிலையில் சுற்றித் திரிந்த அந்த நபர் நேற்று காலை 10 மணியளவில் போலீசாரால் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த  திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது.  தலை மற்றும் இடது காதில் காயமடைந்த  ஹலீம் லெபாய் ஓத்மான் என்ற அந்த முதியவர் இங்குள்ள துவாங்கு பவுஸியா மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றப் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.