கோலாலம்பூர், பிப் 26 - நேற்று தேசிய விளையாட்டு கழகமான ஐ.எஸ்.என்-இன் தலைமை செயல்முறை அதிகாரியாக டாக்டர் பி.வெள்ளப்பாண்டியன் அதிகாரப்பூர்வமாக நியமுக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை பதவி ஓய்வுப் பெற்ற அஹ்மட் ஃப்யிட்சால் முஹ்மட் ரம்லிக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டிருப்பதை அதன் வாரியத் தலைவர் டத்தோ மரினா சின் அறிவித்துள்ளார்.
மலேசிய இளைஞர் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமான IYRES-இன் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியாகப் பணிபுரிந்த டாக்டர் பி.வெள்ளப்பாண்டியன் ஐ.எஸ்.என்-இன் பல முக்கிய பதவிகளிலும் வகித்துள்ளார்.
தடகள செயல்திறன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக டாக்டர் பி.வெள்ளப்பாண்டியன் அனுபவம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


