NATIONAL

வரவு செலவு திட்டத்தில் நிதி முறைகேடு ஏற்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய அரசாங்கம் முயற்சி

25 பிப்ரவரி 2025, 8:34 AM
வரவு செலவு திட்டத்தில் நிதி முறைகேடு ஏற்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய அரசாங்கம் முயற்சி

கோலாலம்பூர், பிப் 25 - சட்டம் 62 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு பொது நிதி ஒதுக்கீடும் முறைகேடு செய்யப் படாததை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் கடந்தாண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட 1957ஆம் ஆண்டு தணிக்கைச் சட்டமும் ஒன்றாகும்.

திருத்தம் செய்யப்பட்ட அச்சட்டம், தேசிய தணிக்கை துறை தலைவருக்கு, புதிய அதிகாரத்தை வழங்கும் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.

"நிறுவனங்கள் உட்பட மற்ற அமைப்புகளில் தணிக்கை செய்யும் அதிகாரம் பிற அமைப்பிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி அல்லது மாநிலத்திடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறும் நிறுவனங்கள் மற்றும் பொதுப் பணத் தணிக்கை அணுகுமுறையைப் பின்பற்றுதல் ஆகியவை சட்டம் 62-இன் கீழ் உள்ள புதிய வழிமுறைகளில் அடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.