கோலாலம்பூர், பிப் 25 - சட்டம் 62 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு பொது நிதி ஒதுக்கீடும் முறைகேடு செய்யப் படாததை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் கடந்தாண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட 1957ஆம் ஆண்டு தணிக்கைச் சட்டமும் ஒன்றாகும்.
திருத்தம் செய்யப்பட்ட அச்சட்டம், தேசிய தணிக்கை துறை தலைவருக்கு, புதிய அதிகாரத்தை வழங்கும் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.
"நிறுவனங்கள் உட்பட மற்ற அமைப்புகளில் தணிக்கை செய்யும் அதிகாரம் பிற அமைப்பிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி அல்லது மாநிலத்திடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறும் நிறுவனங்கள் மற்றும் பொதுப் பணத் தணிக்கை அணுகுமுறையைப் பின்பற்றுதல் ஆகியவை சட்டம் 62-இன் கீழ் உள்ள புதிய வழிமுறைகளில் அடங்கும்.


