NATIONAL

பயனற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, நாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்

24 பிப்ரவரி 2025, 10:09 AM
பயனற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, நாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்

புத்ராஜெயா, பிப் 24 - பயனற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து தொழில்நுட்பத் திறன்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இலக்கவியல் ஆகியவற்றில் மலேசியா கவனம் செலுத்த வேண்டும்.

தொழில்நுட்ப திறன்களை தீவிரமாக வலுப்படுத்தி இலக்கவியலை நோக்கி மாற்றத்தை துரிதப்படுத்தியுள்ள பிற வளர்ந்த நாடுகளை மலேசியா பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருக்கிறார்.

"சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் இப்போது தொழில்நுட்ப திறன்கள், செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் மயமாக்கலை மேம்படுத்தப் போட்டியிடுகின்றன.

ஆகாவே, தனியார் துறை உட்பட புத்ராஜெயா, அதன் நிறுவனங்கள், மற்றும் அரசுத் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். முதலில், நமது செயல்திறனை உயர்த்த வேண்டும். சிறந்த சேவையை வழங்க வேண்டும்," என்றார் பிரதமர்.

ஞாயிற்றுக்கிழமை, புத்ராஜெயாவில் புதுப்பிக்கப்பட்ட `Alamanda` பேரங்காடியை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

மலேசியாவும் பிராஞ்சும் பாதுகாப்பு, பொருளாதாரம், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இணக்கம் கண்டுள்ளதாகக் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி பிரதமர் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.