NATIONAL

வெளிநாட்டில் சிகிச்சை முடிந்தது; பிப்ரவரி 21-ல் நாடு திரும்புகிறார் மாமன்னர்

19 பிப்ரவரி 2025, 9:10 AM
வெளிநாட்டில் சிகிச்சை முடிந்தது; பிப்ரவரி 21-ல் நாடு திரும்புகிறார் மாமன்னர்

கோலாலம்பூர், பிப் 19 – மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தசைக்கூட்டு அதாவது தசை மற்றும் எலும்பு வலிக்காக வெளிநாட்டில் பாரம்பரிய சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொண்டுள்ளார்.

மாமன்னர், இளம் வயதிலிருந்தே விளையாட்டு நடவடிக்கைகளில் குறிப்பாக போலோ விளையாடுவதில் அடிக்கடி ஈடுபட்டவர்.

அதோடு, தீவிர இராணுவப் பயிற்சியுடன் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் கொண்டவர் என்பதால் அவருக்கு அப்பாதிப்பு ஏற்பட்டதாக, இஸ்தானா நெகாரா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

தற்போது சிகிச்சைகள் நல்லபடியாக முடிந்திருக்கும் நிலையில் எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி சுல்தான் இப்ராஹிம் நாடு திரும்புவார்.

இந்நிலையில் மாமன்னர் விரைந்து குணமடைய பிராத்தனைச் செய்த அனைத்து மலேசியர்களுக்கும், சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ச’ரித் சோஃபியா தம்பதியர் நன்றித் தெரிவித்துக் கொண்டனர்.

சிகிச்சைக்காக பிப்ரவரி 7-ஆம் தேதி மாமன்னர் வெளிநாடு கிளம்பிச் சென்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.