கோலாலம்பூர், பிப் 19 - லங்காவியில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு வரை மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 115 பேராக அல்லது 11 விழுக்காடு அதிகரித்தது.
இதன்மூலம் சுற்றுலா வருமானமும் 240 கோடி ரிங்கிட் (34.9%) உயர்ந்துள்ளது.
மேலும், வரி விலக்குகள் காரணமாக 2022ஆம் ஆண்டு தொடங்கி ஏற்பட்ட வருமான இழப்பு அல்லது வரி இழப்பு, 22 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் அல்லது 59.7 விழுக்காடு உயர்வு கண்டுள்ளதாக நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட மக்களவைக்கான எழுத்துப்பூர்வ பதிலில் நிதி அமைச்சு தெரிவித்தது
லங்காவியில் வரி இல்லாத நிலை மீட்சி பெற்றால், அரசாங்கத்திற்கான ஆண்டு வருமான இழப்பு குறித்து பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்மான் நசாருடின் எழுப்பிய கேள்விக்கு இந்த பதில் முன் வைக்கப்பட்டது.


