NATIONAL

பிபிஆர் வீடமைப்பு வசதிகளை சரிசெய்ய 185 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

14 பிப்ரவரி 2025, 4:17 AM
பிபிஆர் வீடமைப்பு வசதிகளை சரிசெய்ய 185 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, பிப் 14 - இவ்வாண்டில் நாடு முழுவதும் உள்ள 358, பிபிஆர் எனும் மக்கள் வீடமைப்புத் திட்டங்களின் வசதிகளை சரிசெய்வதற்கு அரசாங்கம் 185 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

பிபிஆர் குடியிருப்பாளர்கள், குறிப்பாக நகர்ப்புறங்களில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முன்னுரிமை அளிக்கும் மடாணி அரசாங்கத்தின் முயற்சி இதுவாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"பிபிஆர்-இன் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 185 மில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் 100 மில்லியன் ரிங்கிட் செலவழித்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 285 மில்லியன் ரிங்கிட் செலவானது. ஆனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் மின்தூக்கியை சரிசெய்வது வீண் செலவாகாது," என்றார் அவர்.

லெம்பா சுபாங் 1, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிபிஆர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.

லெம்பா சுபாங் 1 பிபிஆர் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி சேதமடையும் மின்தூக்கி வசதிகள் உட்பட மேலும் சில சீரமைப்பு பணிகளுக்கு 1.2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டையும் பிரதமர் அறிவித்தார்.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு அப்பகுதியில் மக்களின் வசதியை கவனத்தில் கொண்டு மின்தூக்கி பழுதுபார்க்கும் திட்டத்தை விரைந்து மேற்கொள்ளவும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சுக்கு அவர் நினைவூட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.