NATIONAL

பி.எல்.கே.என் 3.0இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்

10 பிப்ரவரி 2025, 8:54 AM
பி.எல்.கே.என் 3.0இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்

கோலாலம்பூர், பிப் 10: பி.எல்.கே.என் மூன்றாவது தேசிய சேவை பயிற்சித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அதில் கலந்து கொள்ள முடியாத நிலையில். அதனை ஒத்தி வைப்பதற்கு விரும்புவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம்.

அதை தவிர்த்து, வேலையில் சேர்ந்தவர்கள், அப்பணியிலிருந்து வெளியேற முதலாளிகளிடம் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என தேசிய சேவை பயிற்சி துறையின் தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் டத்தோ யாக்கோப் சமிரான் தெரிவித்தார்.

இந்த மற்றும் வருங்கால பயிற்சியாளர்களுக்கு திட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்காத முதலாளிகள் நியாயமான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

ஆனால், தேசிய சேவை பயிற்சி திட்டத்திற்கு அவர்களும் கட்டுப்பட்டு நடக்கும் பொறுப்பினைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, முதலாளிகள் இத்திட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என்றால், மற்றொரு செயல்முறை செயல்படுத்தப்படும் என்றார்.

இம்முறை இந்த பயிற்சி திட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள், இரண்டாவது அல்லது அடுத்தடுத்த தவணைகளுக்கான ஒத்திவைப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஏனெனில், தேர்ந்தெடுக்கப்படுவர்கள் இப்பயிற்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.