NATIONAL

காஸாவிலுள்ள வெளியேற்ற மையங்களில் கனமழை - கடும் குளிரில் மக்கள் அவதி

7 பிப்ரவரி 2025, 3:35 AM
காஸாவிலுள்ள வெளியேற்ற மையங்களில் கனமழை - கடும் குளிரில் மக்கள் அவதி

காஸா, பிப். 7 - கனமழை காரணமாக காஸா தீபகற்பத்தில்  உள்ள ராஃபா மற்றும் மவாசி கான் யூனிஸிற் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண  முகாம்களில் உள்ள  நூற்றுக்கணக்கான கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) தெரிவித்துள்ளது.

பலத்த காற்றில் தங்கள் கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில்  கடும் குளிரில் தாங்கள் தங்குமிடம் இல்லாமல் பரிதவித்து வருவதாக குடியிருப்பாளர்கள் கூறினர்.

தீவிர குண்டுவீச்சினால் வீடுகள் கடுமையாக சேதமடைந்த பல்லாயிரக்கணக்கான உள்ளூர்வாசிகளின் துயரத்தை காஸா பகுதி முழுவதிலும் பெய்த  கனமழை மேலும் அதிகரித்துள்ளது.

வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் இப்போது குளிர் மற்றும் பலத்த காற்று காரணமாக மிகவும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.  ஏனெனில் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் நைலான் மற்றும் மெல்லிய துணியால் ஆன கூடாரங்களில் வசிக்கின்றனர். அவை மழை மற்றும் புயல் போன்ற பேரிடர்களிலிருந்து குறைந்தபட்ச பாதுகாப்பை மட்டுமே வழங்குகின்றன.

வடக்கு காஸாவுக்குத் திரும்புபவர்கள் உணவு மற்றும் வெப்பமூட்டும் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்வதோடு  தங்கள் கூடாரங்களை அமைத்துப் பாதுகாப்பதிலும் சிரமப்படுகிறார்கள்.

இரவில் குறைந்த வெப்பநிலை காரணமாக பல குடும்பங்கள் தங்களை சூடாக வைத்திருக்க வழியின்றி இருப்பதால் எரிபொருள் பற்றாக்குறை நெருக்கடி அதிகரித்து வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.