NATIONAL

5 ஆண்டுகளுக்குள் ஒற்றை அமர்வு பள்ளி முறை அமல்படுத்தப்படும்

7 பிப்ரவரி 2025, 3:21 AM
5 ஆண்டுகளுக்குள் ஒற்றை அமர்வு பள்ளி முறை அமல்படுத்தப்படும்

குளுவாங், பிப் 7 - இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய அளவில் ஒற்றை அமர்வு பள்ளி முறையை அமல்படுத்த கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.

இதுவரை, நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், ஒற்றை அமர்வு முறையை செயல்படுத்தி உள்ளதாக கல்வி அமைச்சர், ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

அதிகமான மாணவர் எண்ணிக்கையின் காரணத்தினால், எஞ்சிய பள்ளிகளில் அம்முறை அமல்படுத்தப்படவில்லை.

''ஆனால், பள்ளி வளாகம் அமைந்திருக்கும் இடம் மற்றும் பிற நிர்வாக விவகாரங்கள் காரணமாக பள்ளி ஒரே அமர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம்,'' என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.