NATIONAL

ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்கான மானிய விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது

6 பிப்ரவரி 2025, 8:42 AM
ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்கான மானிய விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், பிப் 6: இந்த மாத இறுதி வரை ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்கான மானிய விண்ணப்பத்தை சமூக நலத்துறை (ஜேகேஎம்) திறந்துள்ளது.

ஆட்டிசம் கற்றல் மையம் அல்லது சான்றளிக்கப்பட்ட சிகிச்சை கல்வியைப் பின்பற்றும் 30,000 குழந்தைகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன என ஜேகேஎம் முகநூலில் உள்ள சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் உள்ளூர் குடிமக்களாக இருத்தல், குடும்ப வருமானம் RM2,000க்கு மிகாமல் இருத்தல் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஜேகேஎம் ஊனமுற்ற அட்டை வைத்திருத்தல் (OKU) ஆகியவை தகுதி தேவைகள் ஆகும்.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அதிகாரப்பூர்வ இணையதளம் jkm.gov.my அல்லது அருகிலுள்ள ஜேகேஎம் அலுவலகத்தில் பெறலாம்.

2025 வரவு செலவுத் திட்டத்தில், 30,000 குழந்தைகளுக்கு RM15 மில்லியன் நிதியுடன் ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்கான கல்வி உதவியை அரசாங்கம் அறிவித்தது.

கூடுதலாக, ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான 11 கல்வி மையங்கள் கட்டப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.