ஈப்போ, பிப். 5 - பங்கோர் தீவு அருகே உள்ள பி5 சுங்கை பினாங் பெசார் துரப்பண மேடையிலுள்ள நீர் சேமிப்பு தொட்டியில் ஆடவர் ஒருவரின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
அந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று மாலை 3.15 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தமது துறைக்கு தகவல் கிடைத்தாக மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் கூறினார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட தொடக்கக் கட்ட விசாரணையில் தண்ணீர் சேமிப்பு தொட்டியில் ஆடவர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் தலைகுப்புறக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என அவர் சொன்னார்.
பாங்கோர் சுகாதார கிளினிக் மருத்துவ உதவியாளர்கள் நடத்திய பரிசோதனையில் அந்த நபர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்ய ஆடவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.
சம்பவம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் பங்கோர் காவல் நிலையம் அல்லது மஞ்சோங் மாவட்ட காவல் தலைமையக நடவடிக்கை அறையை 05-6886222 என்ற எண்ணில் அல்லது 014-6828005 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஹஸ்புல்லா கேட்டுக் கொண்டார்.


