NATIONAL

முகநூலில் மன்னரை அவமதிக்கும் வகையில் இடுகைகளை வெளியிட்ட பெண்ணுக்கு RM4,000 அபராதம்

4 பிப்ரவரி 2025, 7:07 AM
முகநூலில் மன்னரை அவமதிக்கும் வகையில் இடுகைகளை வெளியிட்ட பெண்ணுக்கு RM4,000 அபராதம்

ஜோகூர் பாரு, பிப் 4: கடந்த ஆண்டு முகநூலில் மன்னரை அவமதிக்கும் வகையில் இடுகைகளை வெளியிட்டதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்து குழந்தைகளின் தாய்க்கு செஷன்ஸ் நீதிமன்றம் RM4,000 அபராதம் விதித்தது.

நார்லி முகமது யூசோப் (53) அபராதத்தை செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நீதிபதி டத்தோ அகமட் கமால் அரிபின் இஸ்மாயில்

உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் அபராதம் செலுத்தினார்.

தையல்கார் ஒருவரின் உதவியாளராகப் பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்டவர், ஜோகூர் பாருவில் உள்ள பண்டார் ஶ்ரீ ஆலமில் டிசம்பர் 11 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நார்லி நோரின் முகநூல் கணக்கில் அச்செய்தியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் மீது தேச துரோகச் சட்டம் 1948 (சட்டம் 15) பிரிவு 4(1)(a) மற்றும் பிரிவு 4(1) கீழ் குற்றம் சாட்டப்பட்டது. RM5,000க்கு மிகாமல் அபராதம் அல்லது மூன்று ஆண்டுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அப்துல் கபார் அப் லத்தீப் மற்றும் லிடியா சாலே ஆகியோரால் வழக்குத் தொடரப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர்கள் கே. பாரதி மற்றும் பி. ராஜகுணசீலன் ஆகியோர் ஆஜராகினர்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.