கோலா திரங்கானு, ஜன 27: காவல்துறை அதிகாரி போல் காட்டிக் கொள்ளும் "போன் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர் RM155,804 ஐ இழந்தார்.
ஜனவரி 16 ஆம் தேதி, 68 வயதான அப்பெண்மணியை சந்தேக நபர் தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டதாக கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சந்தேக நபர், விசாரணை நோக்கங்களுக்காக மூன்று வங்கிக் கணக்குகளின் தகவல்களை வழங்குமாறு பாதிக்கப்பட்டவரிடம் கேட்டதாக அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவரிடம் டெபிட் கார்டை பிளாஸ்டிக் பையில் போட்டு வீட்டின் முன்புறம் இருக்கும் மரங்களுக்கு இடையே உள்ள இடத்தில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பின், மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்தும் அதிக அளவில் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக அவருக்கு அறிவிப்பு வந்தது.
தனது ஓய்வூதிய சேமிப்பை இழந்த பாதிக்கப்பட்டவர் நேற்று பிற்பகல் 3.35 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்ததாகவும், குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் அஸ்லி கூறினார்.
- பெர்னாமா


