NATIONAL

கர்ப்பிணியைக் கொன்று எரியூட்டிய  நபருக்கு எதிரான விசாரணை அக்டோபரில் தொடங்கும்

20 ஜனவரி 2025, 10:00 AM
கர்ப்பிணியைக் கொன்று எரியூட்டிய  நபருக்கு எதிரான விசாரணை அக்டோபரில் தொடங்கும்

கிள்ளான், ஜன. 20 - ஈராண்டுகளுக்கு முன்பு தனது கர்ப்பிணி காதலியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான வழக்கு எதிர்வரும் அக்டோபர் 27 ஆம் தேதி இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் தொடங்குகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கான புதிய தேதியை துணைப் பதிவாளர் முகமது ஹிர்மான் அப்ராவுப் இன்று  நிர்ணயித்தார்.​​ ​​துணை அரசு வழக்கறிஞர் ஃபாரா அகிலா அகமது  ஃபுவாட் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட  முகமது ஃபக்ருல் அய்மான் சஜாலியின் வழக்கறிஞர் நிக் அகமது புர்ஹான் நிக் அப்துல் முபின் ஆகியோர் இன்றைய விசாரணையில் கலந்து கொண்டனர்.

வழக்கின் விசாரணை எதிர்வரும் அக்டோபர் 27 முதல் 31 வரையிலும்  நவம்பர் 3 முதல் 7 வரையிலும்  நவம்பர் 10 முதல் 14 வரையிலும் நடைபெற  நீதிமன்றம் தேதியை  நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் வழக்கு மேலாண்மை செப்டம்பர் 8 ஆம்  தேதி நடைபெறவுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணை  அடுத்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதி  தொடங்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

கடந்த  2023 மே 22ஆம் தேதி இரவு 8.30 மணி முதல்  மே 23  காலை 8 மணி வரை ஜாலான் சுங்கை லீமாவில் நூர் அனிசா அப்துல் வஹாப் (வயது 21) என்ற பெண்ணைக் கொலை செய்ததாக  22 வயதான முகமது ஃபக்ருல் அய்மான் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை வழங்க வகை செய்யும்.

தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்தாண்டு  மே மாதம் 22ஆம் தேதி  ஜாலான் சுங்கை லீமாவில் உள்ள ஒரு செம்பனைத்  தோட்டத்தில்  உணவகப் பணியாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, வயிறு அறுக்கப்பட்டு, எரியூட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு கருத்து வேறுபாடே காரணம் என்று ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.