NATIONAL

கிரிப்டோ கரன்சி மோசடி- நிர்வாகி 16 லட்சம் வெள்ளியை இழந்தார்

15 ஜனவரி 2025, 3:36 AM
கிரிப்டோ கரன்சி மோசடி- நிர்வாகி 16 லட்சம் வெள்ளியை இழந்தார்

ஷா ஆலம், ஜன. 15 - அம்பாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாகி  இல்லாத கிரிப்டோ  இணைய முதலீட்டுத் திட்டத்தை நம்பி  16 லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகையை இழந்தார்.

முகநூலில்  விளம்பரப்படுத்தப்பட்ட  கிரிப்டோ கரன்சி தொடர்பான  முதலீட்டில் ஈர்க்கப்பட்ட 61 வயதான புகார்தாரர்,  சம்பந்தப்பட்ட  நபரை

தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக சிலாங்கூர் மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் கூறினார்.

அந்த திட்டத்தில் சேருவதற்கான இணைப்பை புகார்தாரருக்கு சந்தேக நபர் அனுப்பியுள்ளார். பின்னர் புகார்தாரர் கிரிப்டோ கரன்சியாக மாற்றுவதற்கு ஏதுவாக  அமெரிக்க டாலர்களை வாங்கும் நோக்கத்திற்காக சந்தேக நபருக்கு சொந்தமான ஆறு வங்கிக் கணக்குகளுக்கு  மொத்தம் 16 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை 15 இணைய பரிமாற்றங்கள் மூலம் அனுப்பியுள்ளார்.

ஆனால், கடந்தாண்டு அக்டோபர் 18 முதல் டிசம்பர் 31  வரையிலான காலக்கட்டத்தில்  பணத்தை செலுத்திய  நிலையில் வாக்குறுதியளித்தபடி எந்த வருமானமும் கிடைக்காததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட புகார்தாரர் நேற்று அம்பாங் ஜெயா மாவட்டத்தில் போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்ததார் என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதனிடையே, மற்றொரு சம்பவத்தில் 62 வயதான  ஓய்வு பெற்ற தனியார் நிறுவனப் பணியாளர்  ஒருவர்  கிரிமினல் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படலாம் என்ற தொலைபேசி அழைப்பினால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக 997,105.50 வெள்ளியை இழந்ததாக  ஹுசேன் கூறினார்.

தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையைத்  தவிர்க்க பணம் செலுத்துமாறு சந்தேக நபர் நிர்பந்தித்ததைத் தொடர்ந்து, புகார்தாரர் இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இரு முறை  பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.