புத்ராஜெயா, ஜன 9: அரசாங்க சேவையை மக்கள் எளிதாக பெறுவதற்காக முதலாவது SENTUHAN MADANI முகப்பு, இன்று புத்ராஜெயா அலமண்டா பேரங்காடியில் திறக்கப்பட்டது.
வெவ்வேறு நிறுவனங்களின் ஆறு முகப்புகள் வழி, 90-கும் மேற்பட்ட அரசாங்க சேவைகள் வழங்கப்படும் என்று பிரதமர் துறை அலுவலகத்தின் மடாணி கண்காணிப்புப் பிரிவு தலைமை இயக்குநர் முஹமட் காலிட் முஹமட் லத்திப் தெரிவித்தார்.
அவை சாலை போக்குவரத்து துறை, மலேசியா தபால் நிறுவனம் , மலேசிய நிறுவன ஆணையம், தெனாகா நெஷனல் நிறுவனம், ஊழியர் சேமநிதி வாரியம் மற்றும் MyDigital ID ஆகியவற்றை உள்ளடக்கி முகப்புகள் ஆகும் என்று காலிட் முஹமட் குறிப்பிட்டார்
''அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் முகப்புகள் ஆகியவற்றை ஓரிடத்தில் வைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன்வழி நீண்ட நேரம் செயல்படக்கூடிய பாதுகாப்பான சேவையை மக்கள் எளிதில் பெற முடியும்,'' என்று முஹமட் காலிட் தெரிவித்தார்
நேற்று, புத்ராஜெயாவில் Sentuhan MADANI முகப்பின் தயார்நிலை பணிகளைப் பார்வையிட்ட பின்னர், காலிட் முஹமட் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா


