NATIONAL

ஊழல் வழக்கு விசாரணையில் தனியார் நிறுவன உரிமையாளருக்கு தடுப்பு காவல்

18 டிசம்பர் 2024, 7:00 AM
ஊழல் வழக்கு விசாரணையில் தனியார் நிறுவன உரிமையாளருக்கு தடுப்பு காவல்

மலாக்கா, டிச 18: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘டத்தோஸ்ரீ’ பட்டம் வழங்க லட்சம் பெற்றதன் தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக சிலாங்கூரில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளரான 46 வயது பெண் ஒருவரை

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று முதல் ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைத்துள்ளது.

சந்தேக நபர் நேற்று மாலை 4.45 மணியளவில் மலாக்கா எம்ஏசிசி அலுவலகத்தில் சாட்சியமளிக்க வந்த போது கைது செய்யப்பட்டார்.

"ஒரு சிண்டிகேட் மூலம் டத்தோஸ்ரீ பட்டத்தைப் பெறுவதற்கு ஒரு தனிநபரிடமிருந்து RM375,000க்கும் அதிகமான தொகையை லஞ்சம் கோரியது மற்றும் பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் விசாரிக்கப்படுகிறார்.

இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 16(a)(A) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் லஞ்சத்தின் மதிப்பை விட ஐந்து மடங்கு அபராதம் அல்லது RM 10,000 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

இதற்கிடையில், மலாக்கா எம்ஏசிசி இயக்குனர் அடி சுபியான் ஷாஃபியை தொடர்பு கொண்டபோது கைது மற்றும் காவலில் வைக்க வழங்கிய உத்தரவை உறுதிப்படுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.