NATIONAL

வெள்ளம்- பகாங், ஜோகூரில் 40 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம்

16 டிசம்பர் 2024, 2:06 AM
வெள்ளம்- பகாங், ஜோகூரில் 40 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், டிச.16 – ஜோகூர் மற்றும் பகாங்கில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாற்பது பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட், கம்போங் பத்து பாடாக் சமூக மண்டபத்தில்  11 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் (டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி ஒரு அறிக்கையில் கூறினார்.

சிகாமட்,  பூலோ காசாப்பில் உள்ள சுங்கை மூவார் நிலையத்தின் வெள்ள அளவீட்டுப் மையத்தில் நீர்மட்ட அளவு சற்று தணிந்து  8.68 மீட்டராகவும் மெர்சிங்கில் சுங்கை பாயா டத்தோ ஆற்றில்  அபாய அளவைத் தாண்டி  1.50 மீட்டராகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பகாங் மாநிலத்தில் வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.  மாரான் மாவட்டத்தில் உள்ள கம்போங் பாரு பெர்த்தானியான் சமூகக் மண்டபத்தில்  இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேர் இன்னும் தங்கியுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.