NATIONAL

கிள்ளான் மாநகராட்சி பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முன்னுரிமை வழங்கும்

12 டிசம்பர் 2024, 7:42 AM
கிள்ளான் மாநகராட்சி பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முன்னுரிமை வழங்கும்

ஷா ஆலம்,டிச 12: புதிய மதிப்பீட்டு வரி விகிதங்களை நிர்ணயித்ததைத் தொடர்ந்து சேவைகளை மேம்படுத்துவதற்காக அடுத்த ஆண்டு கிள்ளான் மாநகராட்சி பொது உட்கட்டமைப்பு மேம்பாட்டில் முன்னுரிமை வழங்கும்.

பொது நலத் திட்டத்தில் பொழுதுபோக்கு வசதிகள், சந்தைகள், அரங்குகள், கடைகள் மற்றும் எல்இடி தெரு விளக்குகள் மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று அதன் மேயர் டத்தோ அப்துட் ஹமீட் ஹுசைன் கூறினார்.

நிலப் பராமரிப்பு, கால்வாய் அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிற திட்டங்களை அவர் விளக்கினார்

"கிள்ளான் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதன் மூலம் பொது நலனுக்கான திட்டங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இதற்கிடையில், ஜனவரி 1 2025 முதல் புதிய வரி விகிதத்தை அமைப்பதன் மூலம் கிள்ளான் மாநகராட்சியின் வரி வசூல் ஆண்டுக்கு RM42 மில்லியன் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.