ஷா ஆலம், டிச 5: வணிகத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும் சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (U-PLATS) பங்கேற்பாளர்களுக்கு யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் RM3,000 சிறப்பு நிதியுதவி வழங்குகிறது.
"பிளாட்ஸ் மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூர் இடையேயான ஒத்துழைப்பு, இப்போது U-PLATS திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு RM3,000 சிறப்பு நிதியுதவி வழங்குகிறது.
"மேலும், தகவலுக்கு சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும், முகநூல் மற்றும் இண்ஸ்டாகிராமில் எங்களைத் தொடர்பு கொள்ளவும் அல்லது hijrahselangor.com ஐப் பார்வையிடவும்" என்று முகநூலில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹிஜ்ரா சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சிறு தொழில்முனைவோருக்கு i-Business மற்றும் Niaga Darul Ehsan Scheme (NaDi) திட்டங்கள் மூலம் RM50,000 வரை நிதியுதவி வழங்குகிறது.
இத்திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த ஆகஸ்ட் வரை 90,475 நிதிகளுக்கு தனது தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது என்று ஹிஜ்ரா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிதியுதவியால் 60,249 ஹிஜ்ரா சிலாங்கூர் தொழில் முனைவோர் பயனடைந்துள்ளதாகவும், இந்த திட்டம் அவர்கள் வணிக மூலதனத்தை திரட்டவும், வணிக உபகரணங்களை வாங்கவும் உதவுவதாக டத்தோ மரியா ஹம்சா விளக்கினார்.
முன்னதாக, இந்த ஆண்டு நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தொழில் முனைவோருக்கு RM1 பில்லியன் கடன்களை வழங்குவதற்கு தனது தரப்பு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


