NATIONAL

பள்ளி கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து மாணவி மரணம்

19 நவம்பர் 2024, 2:54 AM
பள்ளி கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து மாணவி மரணம்

ஜோர்ஜ்டவுன், நவ 19: நேற்று மாலை இடைநிலைப் பள்ளி கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இரண்டாம் படிவ மாணவி உயிரிழந்தார்.

பினாங்கு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து மாலை 5.57 மணிக்கு இச்சம்பவம் குறித்து தனது தரப்புக்கு புகார் கிடைத்தது என்று வடகிழக்கு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அப்துல் ரோசாக் முகமட் கூறினார்.

“சம்பவ இடத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணை மற்றும் இறந்தவரின் உடலைப் பரிசோதித்ததில், இந்த வழக்கில் குற்றத்திற்கான தடையும் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேல் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

விசாரணை பாதிக்கும் வகையில் வழக்கு தொடர்பான தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களை மதிக்கும் வகையில் அச்சம்பவம் தொடர்பான படங்கள் அல்லது வீடியோக்களை பகிர வேண்டாம் என்றும் அப்துல் ராசாக் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.