NATIONAL

ஜனவரி முதல் அக்டோபர் வரை 5,32,125 சாலை விபத்துகள் பதிவு

17 நவம்பர் 2024, 9:00 AM
ஜனவரி முதல் அக்டோபர் வரை 5,32,125 சாலை விபத்துகள் பதிவு

மலாக்கா , நவ 17: கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை மொத்தம் 5,32,125

சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 5,364 விபத்துக்களால் மரணங்கள்

ஏற்பட்டுள்ளன மற்றும் 68 சதவீத இறப்புகள் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும்

பயணிகள் சம்பந்தப்பட்டது என்று துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹஸ்பி

ஹபிபொல்லா கூறினார்.

சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும், குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும்பயணிகள் மத்தியில் சாலை பாதுகாப்பிற்கான முக்கியத்துவம் திறம்பட மற்றும்

தொடர்ச்சியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்நிலைமை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இவ்வாறு ``Klinik Penunggangan Selamat `` என்பது உலக சாலை விபத்து 2024 நினைவு தினத்தை (WDOR 2024) முன்னிட்டு சாலை பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்

இது மோட்டார் சைக்கிள் பயனர்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய அறிவு, விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதற்கான பாதுகாப்பு திறன்களை விரைவாகவும் துல்லியமாகவும் செயல்படுத்துவதில் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.