ஷா ஆலம், நவ 14: சட்டத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய அரசாங்கம் ஒரு கூட்டுக் குழுவை அமைத்துள்ளது.
பெடரல் நீதிமன்றத்தின் (பிகேபிஎம்பி) பதிவாளர் அலுவலகத்துடன் நிறுவப்பட்ட குழு, சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை புறக்கணிக்கவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம்) தெரிவித்தார்.
குழுவின் கண்டுபிடிப்புகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் ``My Digital Justice``க்கான திட்டவரைவை உருவாக்க பயன்படும் என டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட் கூறினார்.
"2025 ஆம் ஆண்டில், டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் சட்டத் துறைக்கான `My Digital Justice`` திட்ட வரைவை அரசாங்கம் தொடங்கும்.
"இந்த திட்டம் சட்டத் துறையில் டிஜிட்டல் திறன்களையும் நீதிக்கான அணுகலையும் அதிகரிப்பதில் டிஜிட்டலை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் மக்களவையில் கூறினார்.
சட்டத் துறை மற்றும் தேசிய சட்டச் சேவைகளில் AI இன் பயன்பாடு குறித்து சியாஹ்ரெட்சன் ஜோஹன் (பாங்கி-ஹரப்பன்) வாய்மொழியாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அசாலினா இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், தேசிய நீதித்துறை அமைப்பில் AI இன் பயன்பாடு இன்னும் நீதிமன்ற பதிவுகள் மற்றும் ஆடியோ அமைப்பை உரையாக மாற்றுவதற்கு மட்டுமே பயன்படுகிறது என்று அவர் விளக்கினார்.
சட்டத் துறையில் AI ஐப் பயன்படுத்துவது, மக்களை நீதிமன்றங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவது உட்பட பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
2025 வரவுசெலவுத் திட்டத்தில் நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்கம் RM61 மில்லியனை ஒதுக்கியுள்ளது.


