NATIONAL

சிலாங்கூர் பட்ஜெட் 2025இல் ஓராங் அஸ்லியின் கல்வி அம்சத்தில் அதிக கவனம் செலுத்துப்படும் என எதிர்பார்ப்பு

13 நவம்பர் 2024, 9:19 AM
சிலாங்கூர் பட்ஜெட் 2025இல் ஓராங் அஸ்லியின் கல்வி அம்சத்தில் அதிக கவனம் செலுத்துப்படும் என எதிர்பார்ப்பு

ஷா ஆலம், நவ 13: சிலாங்கூர் பட்ஜெட் 2025இல், ஓராங் அஸ்லியின் வளர்ச்சியில், குறிப்பாக கல்வி அம்சத்தில் அதிக கவனம் செலுத்துப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல கல்விக்கான அணுகல் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் மற்றும் சம்பந்தப்பட்ட குழுவின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று ஓராங் அஸ்லி விவகாரங்களின் ஆட்சிக்குழு உறுப்பினர் நம்புகிறார்.

"ஓராங் அஸ்லி கல்வி விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் அது அவர்களின் உயர்வுக்கு உத்தரவாதம் அளிக்கும்.

"டத்தோ மந்திரி புசார் உடனான பல சந்திப்புகளில், நான் அடிக்கடி இந்த விஷயத்தை வலியுறுத்தி உள்ளேன். சிலாங்கூர் பட்ஜெட் 2025இல் அதற்கான நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்," என வீ.பாப்பா ராய்டு கூறினார்.

மேலும், பொருளாதார வேகத்தை தொடர்ந்து அதிக ஊதியம் தரும் வேலை வாய்ப்புகள் தொடர்பாகவும் மாநில பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.