NATIONAL

தாய்லாந்தில் இருந்து 475 கிலோகிராம்  அரிசியை கடத்திய 15 வயது இளைஞன் கைது

12 நவம்பர் 2024, 8:07 AM
தாய்லாந்தில் இருந்து 475 கிலோகிராம்  அரிசியை கடத்திய 15 வயது இளைஞன் கைது

கோத்தா பாரு, நவ.12: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் கருதப்படும் 475 கிலோகிராம் அரிசி கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து தான் ஓட்டிச் சென்ற புரோட்டான் பெர்சோனா காருடன் 15 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்தனர்.

நேற்று காலை 8 மணியளவில் சிம்பாங் தீகா கம்போங் டாங்கர், பாசிர் மாஸில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாகப் பொது நடவடிக்கையின் (பிஜிஏ) தென்கிழக்கு படைப்பிரிவின் கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அஜான் நிக் அப்துட் ஹமிட் தெரிவித்தார்.

செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட RM1,900 மதிப்புள்ள அரிசியின் கூரியராக அந்த இளைஞன் செயல்பட்டதாக அவர் கூறினார்.

“தேசிய அரிசி மற்றும் அரிசி ஒழுங்குமுறைச் சட்டம் 1994 இன் பிரிவு 20ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் படுகிறது,” என்று டத்தோ நிக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.