கோலாலம்பூர், நவ. 8: அம்பாங் பாயிண்டில் உள்ள வங்கி ஒன்றில் பாதுகாப்பு நிறுவனத்தால் வசூல் செயல்முறை மேற்கொள்ளப்பட்ட பின்னர் 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அடங்கிய பை காணாமல் போனதாகக் கூறப்படும் வழக்கை விசாரிக்க உதவுவதற்காக இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
52 மற்றும் 38 வயதுடைய குறிப்பிட்ட உள்ளூர் ஆணும் பெண்ணும் இரவு 10 மணிக்கு அம்பாங்கில் கைது செய்யப்பட்டார் என அம்பாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
சம்பவத்தன்று இருவரும் பாதுகாப்பு வேனில் இருந்த ரிங்கிட் 1,071,000 பணம் கொண்ட ஒரு பையை எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது என்றார்.
"இருவரின் சிறுநீர் பரிசோதனைகளும் எதிர்மறை முடிவை காட்டிய நிலையில், அவர்களுக்கு எந்த குற்றப் பதிவும் இல்லை," என்று அவர் கூறினார்.
சட்ட விதி 379வது கொள்ளை பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு சந்தேக நபர்களும் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று முகமட் அசாம் கூறினார்.
அந்த பை சம்பவத்தன்று அம்பாங்-கோலாலம்பூர் விரைவுச்சாலைக்கு செல்லும் ஜாலான் உலு கிளாங் சாலையின் நடுவில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது
சம்பந்தப்பட்ட வாகனம் வளைவு பாதையின் வழியாக சென்றபோது பை கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.
– பெர்னாமா


