வருகை தாருங்கள் 2026 க்கு தயாராகும் வகையில் கோலாலம்பூரில் ஏற்படும்
திடீர் வெள்ளத்தை சமாளிக்க கோலாலம்பூர் நகர மன்றம்(டிபிகேஎல்)
பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
குறுகிய கால திட்டமாக, வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள கால்வாய்
அமைப்பை மேம்படுத்தி சீரான நீர் ஓட்டத்தை உறுதி செய்யவும், மழை
பெய்யும் போது தண்ணீரை தேக்கி வைக்கவும் டிபிகேஎல் நிறுவனம்
முயற்சித்து வருகிறது என பிரதமர் துறை அமைச்சர் (மத்திய
பிரதேசங்கள்)தெரிவித்தார்.
திறந்த வெள்ள நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர் தேக்கங்கள், நதி பராமரிப்பு,
முக்கிய பள்ளங்கள் மற்றும் சாலையோர கால்வாய் அமைப்புகளின்
பராமரிப்பையும் டிபி கேஎல் தொடர்கிறது.
கோலாலம்பூரில் திடீர் வெள்ளப் பிரச்சனையை சமாளிப்பதற்கான
முயற்சியில், டிபிகேஎல் 15 திறந்த வெள்ள நீர்த் தேக்கங்களையும் ஒன்பது
நிலத்தடி மூடிய குளங்களையும் பராமரிக்கிறது ; என்று டாக்டர் ஜாலிஹா
முஸ்தபா கூறினார்.
இன்று மக்களவையில் அமைச்சரின் கேள்வி அமர்வின் போது பத்து பஹாட்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒன் அபு பக்கரின் கேள்விக்கு பதிலளித்த டாக்டர்
ஜாலிஹா, நீண்ட கால நடவடிக்கையாக 2022 மற்றும் 2023 க்குள் ஏழு
வெள்ளத் தணிப்பு திட்டங்கள் நிறைவடைந்துள்ளது என்றார்.
2024 ஆம் ஆண்டில், 14 திட்டங்களில் இரண்டு திட்டங்கள்
முடிக்கப்பட்டுள்ளன, நான்கு செயல்பாட்டில் உள்ளன மற்றும் எட்டு டெண்டர்
பகுப்பாய்வு கட்டத்தில் உள்ளன.
திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, என்று அவர் கூறினார்.







