கோலாலம்பூர், அக் 24: இன்று முதல் தீபகற்பத்தில் உள்ள ஏழு பகுதிகளில்

வெப்ப வானிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வுத் துறை

(மெட் மலேசியா) வெளியிட்டுள்ளது.

அவை பேராக்கில் (லாருட்,மத்தாங்,கோலா கங்சார்) சிலாங்கூரில் (கோம்பாக்,

பெட்டாலிங்) புத்ராஜெயா மற்றும் பகாங்கில் (மாரான், தெமெர்லோ) ஆகிய

இடங்கள் ஆகும்.

அப்பகுதிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 35

முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று அந்த அறிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி வானிலை குறித்த சமீபத்திய தகவலுக்கு, பொதுமக்கள்

https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ என்ற

இணையதளத்தைப் பார்வையிடலாம்.

– பெர்னாமா