நலன்புரி அம்சத்தில் ஒரு முழுமையான திட்டத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு, முதியோர்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும். 2030இல் வயதான சமுதாயம் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே அதற்கு நாம் தயாராக
வேண்டும்.
உதாரணமாக, இதற்குப் பிறகு நாங்கள் முதியோர்களுக்கான சுகாதாரப் பரிசோதனைகள்
அல்லது உணவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொள்வோம், என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
2030 ஆம் ஆண்டளவில், மலேசியா முதியோர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 5.3 மில்லியன் மக்கள் அல்லது நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
காலநிலை மாற்ற தழுவல் மையம் அனைத்து சுற்றுச்சூழல் காரணிகளையும், குறிப்பாக
வனவியல் மற்றும் பல்லுயிர், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கவனிக்கும்.
அடுத்த ஆண்டு இந்த மையம் சீராக இயங்குவதை உறுதி செய்வோம். ஆய்வு செய்ய
வேண்டிய பல விஷயங்கள் இருப்பதால் நாங்கள் இன்னும் தொடங்கவில்லை. அதன்
செயல்பாட்டை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறோம்; என்று அவர் கூறினார்.
நீர் வளம், விவசாயம், சுகாதாரம், நில பயன்பாடு, கழிவு மேலாண்மை மற்றும்
போக்குவரத்து ஆகிய முக்கிய துறைகளில் இந்த மையம் கவனம் செலுத்தும் என்று ஜமாலியா கூறினார்.


