NATIONAL

பட்ஜெட் 2025ல் பிபிடிகளுக்கு RM150 மில்லியன் உடனடி ஒதுக்கீடு

23 அக்டோபர் 2024, 9:00 AM
பட்ஜெட் 2025ல் பிபிடிகளுக்கு RM150 மில்லியன் உடனடி ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 23 - கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் 2025ல் பிபிடிகளுக்கு RM150

மில்லியன் உடனடியாக ஒதுக்கப்பட்டதை ஷா ஆலம் மாநகராட்சி வரவேற்றுள்ளது.

நகரின் கால்வாய் அமைப்பை மேம்படுத்துவதற்கான அதிக செலவுகளை ஈடுகட்ட இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஷா ஆலம் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம்

கூறினார்.

இந்த உடனடி நிதியுதவி மூலம், அடையாளம் காணப்பட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில்

பல கால்வாய் அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சரி செய்தல் போன்ற வெள்ளம்

தொடர்பான பிரச்சனைகளில் நாம் கவனம் செலுத்த முடியும்.

பிபிடிகளுக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் தேவைப்படுகின்றன, ஏனெனில் இந்த அமைப்புகளை

பராமரிப்பதற்கு அதிக செலவுகள் ஏற்படும், என்று அவர் நேற்று, டிடிடிஐ ஜெயாவில் உள்ள

டேவான் பூங்கா கெர்தாஸில் தீபாவளி நன்கொடை  அளிப்பு  நிகழ்ச்சியின் போது

கூறினார்.

அக்டோபர் 18ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகர்ப்புறங்களில் உள்ள

கால்வாய் அமைப்பை சுத்தம் செய்யவும்,நதியை ஆழப்படுத்தவும் பிபிடிகள் மற்றும்

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறைக்கு உடனடியாக 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

செய்வதாக அறிவித்தார்.

வெள்ள முன்னெச்சரிக்கை மேம்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை முகமைக்கு

கிட்டத்தட்ட RM 600 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதில் RM 300 மில்லியனுக்கும் அதிகமான உடனடி ஒதுக்கீடு, பேரழிவுகள் எழும் போது

அவற்றைக் கையாளுவதற்கு நாடு நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.