ஷா ஆலம்,அக் 23: நவம்பர் 15 முதல் ஜனவரி 2025 இறுதி வரை சிலாங்கூர் மாநில
வனவியல் துறை (ஜேபிஎன்எஸ்) தனது மேற்பார்வையின் கீழ் இருக்கும் நிரந்தர
வனப் பகுதி மற்றும் பராமரிப்பு சமூக வனப் பூங்காக்களில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை (எம்டிஎல்)
பருவத்தைத் தொடர்ந்து வருவையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப் படவுள்ளது என்று சிலாங்கூர் மாநில
வனத்துறை இயக்குனர் அசார் அஹ்மட் கூறினார்.
சிலாங்கூரில் உள்ள பராமரிப்பு சமூக வன பூங்காக்களில் , ரிம்பா கபாய், குனோங் நுவாங், ரிம்பா காஞ்சிங், சுங்கை சோங்காக், சுங்கை செண்டட், சுங்கை தெகலா, சுங்கை
துவா, அம்பாங், கோமன்வெல், கோத்தா டாமன்சாரா மற்றும் டெம்ப்ளர் ஆகியவை
அடங்கும்.
– பெர்னாமா


