ஷா ஆலம், அக் 22: ஷா ஆலம் மாநகர சபையின் (எம். பி. எஸ். ஏ) நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 1,000 நபர்கள் அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள தீபாவளியை முன்னிட்டு அன்பளிப்புகளை பெற்றனர்.
ஷா ஆலம் மேயர் ஒவ்வொரு நபருக்கும் அரிசி, மாவு மற்றும் 150 ரிங்கிட் மதிப்புள்ள மசாலாப் பொருட்கள் போன்ற RM 100 பண அன்பளிப்பும் பெற்றனர்.
"இந்த வருடாந்திர கொண்டாத்திற்கான அன்பளிப்பு ஊனமுற்றவர்கள், முதியவர்கள் மற்றும் ஒற்றை தாய்மார்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது".
"இன்று, எம். பி. பி. 16 மண்டலத்திலிருந்து 50 பெறுநர்கள் அந்த அன்பளிப்பை பெற்றனர்.
அவ்வப்போது பிற நிர்வாகப் பகுதிகளுக்கும் தொடரும்" என்று டத்தோ 'முகமது ஃபவுஸி முகமது யத்திம் கூறினார்.
ஷா ஆலம் தி.தி ஜெயாவில் உள்ள பேப்பர் ஃப்ளவர்ஸ் சேம்பரில் தீபாவளி கரிசன அன்பளிப்பு ஒப்படைப்பு விழாவிற்கு அவர் வருகை தந்தார்.
இது போன்ற பங்களிப்புகள் வழி எம். பி. எஸ். ஏ மற்றும் சமூகத்திற்கு இடையிலான ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் உறவின் பிணைப்பு வலுப்படும என 66 வயது பெறுநரான கே. கவ்ரி,கூறினார். இந்த அன்பளிப்பை பெறுவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
இது மிகவும் அர்த்தம் உள்ளது என்று விவரித்த அவர் இதற்கு முன்பு இதுபோன்ற எதையும் பெறவில்லை.
"எனது அரிசி மாவு மற்றும் சமையல் எண்ணெய் போன்ற தீபாவளிக்கு சமையலறைத் தேவைகளை நான் இன்னும் வாங்கவில்லை". அதைப் பெறும் போது, அது தனது சுமையை குறைக்கிறது, அதை மீண்டும் வாங்க வேண்டிய அவசியமில்லை, என்றார்.
64 வயதான எஸ். உமா சுந்தரி என்ற ஒற்றைத் தாய்க்கு, அவர் பெற்ற பணத்தை தனது பேரக் குழந்தைகளின் ஆடைகள் போன்ற தேவைகளை வாங்க பயன்படுத்த விரும்புகிறார்.
"இரண்டு பேரக்குழந்தைகள் என்னுடன் தங்கி உள்ளனர். அதனால்தான் நான் அந்த பணத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆடைகளை வாங்க விரும்புகிறேன்". இந்த பணத்தால், தனக்கு தீபாவளி கொண்டாட்டம் மேலும் குதூகலமானது என்றார்.


