NATIONAL

ரோன்95 பெட்ரோலுக்கான உதவித் தொகை அடுத்தாண்டு மத்தியில் மறுசீரமைப்பு

18 அக்டோபர் 2024, 9:56 AM
ரோன்95 பெட்ரோலுக்கான உதவித் தொகை அடுத்தாண்டு மத்தியில் மறுசீரமைப்பு

ஷா ஆலம், அக். 18 - நாட்டிலுள்ள 85 விழுக்காட்டு மக்களுக்கு

பெட்ரோலுக்கான உதவித் தொகையாக சுமார் 1,200 கோடி வெள்ளியை

அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருகிறது.

பெரும்பாலான மக்களுக்கு உதவித் தொகை வழங்கும் கடப்பாட்டை

அரசாங்கம் தொடர்ந்து நிறைவேற்றி வரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ

அன்வார் இப்ராஹிம் கூறினார்.

குறிப்பாக, மின்சாரத்திற்கான உதவித் தொகை மறுசீரமைப்பு செய்யப்பட்ட

போது 85 விழுக்காட்டு மக்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படாத அதே

அணுகுமுறை பெட்ரோல் உதவித் தொகை மறுசீரமைப்பிலும்

பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது மலேசியாவில் ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு

வெ.2.05 ஆகும். அதே சமயம் தாய்லாந்தில் 5.85 வெள்ளியாகவும்

சிங்கப்பூரில் வெ.9.02 வெள்ளியாகவும் சவூதி அரேபியாவில் வெ.2.66

வெள்ளியாகவும் விற்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

பெட்ரோலின் குறைவான விலை காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டு

அந்த எரிபொருளுக்கு அரசாங்கம் வழங்கிய உதவித் தொகை 2,000 கோடி

வெள்ளியை எட்டியது என்று அவர் தெரிவித்தார்.

ஆகவே. அடுத்தாண்டு மத்தியில் ரோன்95 பெட்ரோலுக்கான உதவித்

தொகை மறுசீரமைப்பு செய்யப்படும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.