ஷா ஆலம்,அக் 17: கடலோரப் பகுதியில் இன்று தொடங்கிய கடல் சீற்றம் காரணமாக
தடுப்புச் சுவர்களை வலுப்படுத்த மணல் மூட்டைகளை நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) அமைத்தது.
தடுப்புச் சுவர் உறுதியாக இருப்பதை உறுதிசெய்ய, வடிகால் துறை அவ்வப்போது கண்காணிப்பு ரோந்துப் பணிகளையும் மேற்கொள்கிறது என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அதிக அலைகள் மற்றும் வடகிழக்கு பருவமழை போன்ற நிகழ்வுகளுக்கு
தயார்படுத்துவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழு மூலம் மாநில அரசு ஓர்
ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தியது.
அனைத்து மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப்
படைகள் தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் முகநூலில்
தெரிவித்தார்.


