NATIONAL

2025 ஆசியான் தலைமைக்கான தயார் நிலை குறித்து விவாதிக்க பிரதமர் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்

16 அக்டோபர் 2024, 5:02 AM
2025 ஆசியான் தலைமைக்கான தயார் நிலை குறித்து விவாதிக்க பிரதமர் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்

செர்டாங், அக். 16 - எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் ஆசியான் அமைப்பின்

தலைவர் பொறுப்பை மலேசியா ஏற்பதற்கான தயார் நிலை குறித்து

விவாதிப்பதற்காக இன்று நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக்

கூட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

தலைமையேற்கவுள்ளார்.

அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதை உறுதி

செய்யும் நோக்கில் இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுவதாக

உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ

அர்மிஸாம் முகமது அலி கூறினார்.

பிரதமர் இன்று சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவிருக்கிறார்.

வழக்கமாக புதன் கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம்

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் காரணமாக தற்போது வெள்ளிக்கிழமைக்கு

மாற்றப்பட்டுள்ளது.

எனினும், ஆசியான் தலைவர் பொறுப்பை மலேசியா ஏற்பதற்கான தயார்

நிலை குறித்து விவாதிப்பதற்காக இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இந்த

சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

மார்டி புத்தாக்க தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற 2024

அக்ரோஇன்வெட் நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர்

இதனைத் தெரிவித்தார்.

இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் தலைநகரில் உள்ள நாடாளுமன்றக்

கட்டிடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை லாவோசில் நடைபெற்ற 44 மற்றும் 45வது

ஆசியான் உச்சநிலை மாநாட்டின் முடிவில் ஆசியான் தலைவர் பதவியை

லாவோஸ் பிரதமர் சோனேஷாய் ஷிப்போன்டோன் பிரதமர் அன்வாரிடம்

சடங்குப்பூர்வமாக ஒப்படைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.