ஷா ஆலம், அக் 15 – இன்று மாலை வரை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
அவை உலு சிலாங்கூர், கிள்ளான் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.
இதே வானிலைதான் கோலாலம்பூர், பெர்லிஸ், பேராக், கெடா, திரங்கானு, பினாங்கு, கிளந்தான், பகாங், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.
மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படும் போது இந்த எச்சரிக்கை வழங்கப்படும் என அத்துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.


