கோலாலம்பூர், அக் 12: நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள பழுதடைந்த பள்ளிகளை தரம் உயர்த்தி புனரமைப்பதற்கான 1,091 திட்டங்களில் 717 நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள 183 திட்டங்கள் தற்போது கட்டுமானத்தில் உள்ளன. 176 திட்டங்கள் கட்டுமானத்திற்கு முந்தைய கட்டத்தில் உள்ளன. மேலும் 15 மறுமதிப்பீடு செய்ய படுகின்றன என கல்வி அமைச்சு தெரிவித்தது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமான காலம் ஆறு முதல் 36 மாதங்கள் வரை ஆகும் என கல்வி அமைச்சு தெரிவித்தது. தற்போது வரை மொத்தம் 1,091 மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்த RM8.5 பில்லியன் செலவில், சபாவில் 339, சரவாக்கில் 400 மற்றும் தீபகற்பத்தில் 352 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
பழுதடைந்த பள்ளிகளை தரம் உயர்த்தி மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில், அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் பொதுத்துறை சீர்திருத்தத்திற்கான சிறப்பு பணிக் குழுவை (STAR) நிறுவியது.
இத்திட்டத்தை பல்வேறு நிலைகளில் செயல்படுத்த ஒருங்கிணைத்த கமிட்டி மற்றும் ஒரு தொழில்நுட்பக் குழுவை கல்வி அமைச்சு நிறுவியது.
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்விக்கான அணுகலை வழங்குவதை உறுதி செய்வதற்காக, கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் நாடு முழுவதும் பழுதடைந்த பள்ளிகளை மேம்படுத்துதல் மற்றும் மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பெர்னாமா