NATIONAL

பிட்காயின் மோசடிக் கும்பலிடம் ஆடவர் வெ.130,000 இழந்தார் - வங்கிக் கணக்கின் உரிமையாளர் கைது

9 அக்டோபர் 2024, 3:38 AM
பிட்காயின் மோசடிக் கும்பலிடம் ஆடவர் வெ.130,000 இழந்தார் - வங்கிக் கணக்கின் உரிமையாளர் கைது

பாலிக் பூலாவ், அக். 9- பிட்காயின் முதலீட்டு மோசடிக் கும்பலிடம்

தனது வங்கி கணக்கை வழங்கியவர் என சந்தேகிக்கப்படும் ஆடவரை

போலீசார் நேற்று கைது செய்தனர்.

மொத்தம் 129,970 வெள்ளியை உட்படுத்திய போலி முதலீட்டு மோசடி

தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு 36 வயதுடைய அந்த

ஆடவரை பாராட் டாயா மாவட்ட காவல் துறையின் வர்த்தக

குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்துள்ளதாக பாராட் டாயா மாவட்

போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள் ரிஸால் ஜெனால்

கூறினார்.

அந்த போலி முதலீட்டு மோசடிக் கும்பலிடம் ஏமாற்றப்பட்டது தொடர்பில்

பாயான் பாருவைப் சேர்ந்த 44 வயது ஆடவர் ஒருவர் போலீசில் செய்த

புகாரைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக

அவர் தெரிவித்தார்.

இந்த பிட்காயின் திட்டத்தின் வாயிலாக ஆண்டுக்கு 200 விழுக்காட்டு

லாபத்தை பெற முடியும் என்று அக்கும்பல் வாக்குறுதியளித்ததாகவும்

எனினும், வாக்குறுதியளித்தப்படி லாபம் கிடைக்கவில்லை என்றும் அந்த

ஆடவர் தனது புகாரில் கூறியுள்ளார் என்றார் அவர்.

இவ்வாண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி

வரையிலான காலக்கட்டத்தில் கைதான நபர் உள்பட பல்வேறு

நபர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளில் அந்த ஆடவர் பணத்தை

செலுத்தியுள்ளார். அவர் செலுத்திய தொகையின் மொத்த மதிப்பு 129,970

வெள்ளியாகும் என கமாருள் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

கைதான அந்த ஆடவர் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ்

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும்

சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.