கோலாலம்பூர் அக். 7 ; பிரதமரின் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு நேற்று செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஃபரிக் ரிசல் அப்துல் ஹமிட் நேற்று இரவு ஒரு அறிக்கையில், டாக்டர் வான் அசிசா உடல் நலம் சீராக இருப்பதாகவும், ஆனால் இன்னும் மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்றிரவு பேஸ்புக்கில் ஒரு பதிவில், மலேசியர்களை தனது மனைவி டாக்டர் வான் அசிசா விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
- பெர்னாமா


