ECONOMY

பணவீக்கத்தை சமாளிக்கவும், ஊதியத்தை அதிகரிக்கவும் பட்ஜெட் 2025 கவனம் செலுத்தும்- பிரதமர்

5 அக்டோபர் 2024, 5:39 AM
பணவீக்கத்தை சமாளிக்கவும், ஊதியத்தை அதிகரிக்கவும் பட்ஜெட் 2025 கவனம் செலுத்தும்- பிரதமர்

கோலாலம்பூர், அக்.5 - அக்டோபர் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப் படும் பட்ஜெட் 2025-ல் பணவீக்கப் பிரச்சினையை மடாணி அரசாங்கம் தீர்க்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவில் சமையல் எண்ணெய், பெட்ரோல் மற்றும் மாவு போன்ற பொருட்களின் விலைகள் ஒப்பீட்டளவில் மலிவானவை என்றாலும், வருமான அளவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார்.

"வருமானத்தின் அளவு அதிகரிக்கவில்லை, (இடையில்) உற்பத்தி திறன் அல்லது முதலீடுகளின் அதிகரிப்பு  ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும்; அதைத்தான் நான் சிவில் சர்வீஸில் (அரசாங்க சேவையில்) செய்திருக்கிறேன். கடந்த 12 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினோம்.

அது தனியார் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும் "உங்கள் சொந்த தொழிலாளர்களை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள்  தார்மீக தூண்டுதலைப் பயன்படுத்தலாம். (உதாரணமாக), நீங்கள் RM 1 பில்லியனுக்கும் RM4 பில்லியனுக்கும் இடைப்பட்ட லாபத்தைப் பதிவுசெய்தால், அந்த முறையில் உங்கள் தொழிலாளர்களுக்கு ஊதியம் (நியாயப்படுத்த) முடியாது.

"எனவே, வருமான அளவை அதிகரிக்க சில அழுத்தம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் விலைகள் பற்றிய கவலைகள் இருந்தாலும், குறைந்த ஊதியமும் அதன் தாக்கத்தை  உணர முக்கிய  காரணம் ஆவதாகவும், அவர் CNBC க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆகஸ்ட் 2024 இல் மலேசியாவில் பணவீக்க விகிதம் ஆண்டுக்கு ஆண்டு 1.9 சதவீதமாக இருந்தது என்று புள்ளியியல் துறை (DOSM) தெரிவித்துள்ளது.

DOSM இன் படி, ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் உணவகம் மற்றும் தங்குமிட சேவைகள் (3.2 சதவீதம்) அதிகரித்ததன் மூலம் உந்தப் பட்டது; தனிப்பட்ட பராமரிப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் இதர பொருட்கள் மற்றும் சேவைகள் (3.2 சதவீதம்); வீடு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரிபொருள்கள் (3.1 சதவீதம்); மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் (2.0 சதவீதம்).

சிவில் சர்வீஸ் சம்பளத்தைப் பொறுத்தவரை, அன்வார் முன்னதாகவே அரசு ஊழியர்களுக்கு 15 சதவீத உயர்வை அறிவித்தார், நிர்வாக மற்றும் தொழில்முறை குழுக்கள் மற்றும் உயர் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு ஏழு சதவீத உயர்வு.

கட்டம் ஒன்றுக்கு டிசம்பர் 1, 2024 முதல் மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு ஜனவரி 1, 2026 முதல் கட்டங்களாக சரிசெய்தல் செயல்படுத்தப்படும்.

12 வருடங்களில் இதுவே முதன்முறையாகச் செய்யப்படும் சம்பளச் சீர்திருத்தம் என்பதுடன், தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு சரியான நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.