NATIONAL

வெ.3.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள், உபகரணங்கள் அழிப்பு- கேலாலம்பூர் போலீஸ் நடவடிக்கை

2 அக்டோபர் 2024, 8:46 AM
வெ.3.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள், உபகரணங்கள் அழிப்பு- கேலாலம்பூர் போலீஸ் நடவடிக்கை

கோலாலம்பூர், அக். 2- வழக்குகளில் சாட்சிப் பொருள்களாக தாக்கல்

செய்யப்பட்ட பல்வேறு வகையான போதைப் பொருள் மற்றும்

தடைசெய்யப்பட்ட வஸ்துகளை பதப்படுத்தும் உபகரணங்களை

கோலாலம்பூர் போலீசார் அழித்துள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை திறக்கப்பட்ட 2,844

விசாரணை அறிக்கைளை உட்படுத்திய 474.7 கிலோ போதைப் பொருள்

மற்றும் 982.287 லிட்டர் திரவமய போதைப் பொருள் இந்நடவடிக்கையின்

போது அழிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ

ருஸ்டி முகமது ஈசா கூறினார்.

இந்த போதைப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் யாவும் தேசிய

போலீஸ் படைத் தலைவரின் உத்தவு ஆணை டி207க்கு (வழக்குப்

பொருள்கள் அழிப்பு) ஏற்ப நெகிரி செம்பிலான், புக்கிட் பெலாண்டோக்கில்

உள்ள குவாலிட்டி ஆலம் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் கழிவுப் பொருள்

சுத்திகரிப்பு மையத்தில் அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அழிக்கப்பட்ட போதைப் பொருள்களில் 3 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரம்

வெள்ளி மதிப்புள்ள 385.530 கிலோ மெத்தம்பெத்தமின், 10 லட்சத்து 50

ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 70.244 கிலோ எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள்,

308,000 வெள்ளி மதிப்புள்ள 8.670 கிலோ ஹெரோயின் மற்றும் 433,000

வெள்ளி மதிப்புள்ள 8.671 கிலோ கஞ்சா ஆகியவையும் அடங்கும் என்று

அவர் சொன்னார்.

இன்று கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.