NATIONAL

ஜிஐஎஸ்பி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநலம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது

1 அக்டோபர் 2024, 2:31 PM
ஜிஐஎஸ்பி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநலம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது

புத்ராஜெயா, அக் 1: ஜிஐஎஸ்பி நிறுவனம் நடத்தும் தொண்டு இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் மன நலத்தை சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) மதிப்பாய்வு செய்து வருகிறது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் தாங்கள் எதிர்கொண்ட சம்பவங்களால் மனநலப் பிரச்சனைகளைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிவ்ளி அமாட் கூறினார்.

"பல விஷயங்கள் இன்னும் விசாரணையில் உள்ளன. இதில் சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கும் சேவையில் ஈடுபடுவோம், மேலும் தேசிய மனநல சுகாதார மையம் (NCEMH) மருத்துவ சேவையை வழங்கும் என்று நான் நம்புகிறேன்," என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இன்னும் பெறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

NCEMH குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் ஒத்துழைப்பை வழங்குகிறது. அதே நேரத்தில் கேகேஎம் உடல்நலம் மற்றும் மருத்துவ அம்சங்கள் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் நிபுணத்துவத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி வழங்கப்படும் என்றார்.

செப்டம்பர் 11 அன்று, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் ஜிஐஎஸ்பி நிறுவனத்தால் நடத்தப்படும் 20 தொண்டு இல்லங்களில் காவல்துரையினர் சோதனை நடத்தினர், அதில் குழந்தைகள் புறக்கணிப்பு, பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 402 குழந்தைகளை மீட்கப்பட்டனர்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.