ஷா ஆலம், அக் 1: மலேசியா தூய்மை தினத்தை முன்னிட்டு நேற்று பெட்டாலிங் ஜெயா
மாநகராட்சியில் மொத்தம் 1,176 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
இத்திட்டத்தில் 292 தன்னார்வலர்கள் 10 பகுதிகளில் துப்புரவு நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளனர் என பெட்டாலிங் ஜெயா துணை மேயர் அஸ்னான் ஹாசன் கூறினார்.
பொது சுகாதாரம் மற்றும் குப்பைகளை எவ்வாறு முறையாக அகற்றுவது என்பது குறித்த
விழிப்புணர்வை சமூகத்திற்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
மேலும், இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள 156 பிபிடிகளை உள்ளடக்கிய ஒரு
ஒருங்கிணைந்த மெகா துப்புரவு நடவடிக்கை ஆகும்; என்று அவர் கூறினார்.


