ஷா ஆலம், செப் 30: இந்த ஆண்டு அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு செய்த பெங்கெரக் பெலியா சிலாங்கூர் (பிபிஎஸ்) நிகழ்வில் மாண்டரின் மொழி வகுப்பும், ரெஸ்யூமி பயிற்சி பட்டறையும் இடம்பெறும்.
இந்த பாடத் திட்டம் எட்டு வாரங்கள் நீடிக்கும் மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்காக இந்த ஆண்டு இறுதியில் பயிலரங்கம் நடத்தப்படும் என்றும் 31 வயதான ரூபன் ராஜ் கூறினார்.
"இது எனது இரண்டாவது நியமனம் ஆகும். எனவே, எனது கடந்த கால அனுபவத்தைப் பயன்படுத்தி பயனுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இளைஞர்களுக்கு உதவ விரும்புகிறேன்.
"அதே நேரத்தில், மாநிலத்தின் நலன் சார்ந்த திட்டங்களையும் மக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்துவேன். இது குடியிருப்பாளர்களின் நலனை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாகும்," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இளைஞர்களை அணுகுவதற்கு சமூக ஊடகங்களை ஒரு ஊடகமாக பயன்படுத்துவேன் என்று சபாக் பெர்ணம் பெபிஎஸ் உறுப்பினர் ஐனதுல் நத்ரா அஸ்மான் கூறினார்.
"இளைஞர்களுக்காக நாங்கள் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வோம். ஏரோபிக்ஸ் போன்ற நடவடிக்கைகளை மற்ற தரப்புடன் இணைந்து வெற்றிகரமாகச் மேற்கொள்வோம்," என்று அவர் கூறினார்,


